Wednesday 10 November 2010

டெலிபோன், செல்போன் கட்டணத்தை ரொக்கமாக செலுத்த நவீன எந்திரம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பி.எஸ்.என்.எல். நிறுவனம் செல்போன், டெலிபோன் வாடிக்கையாளர்களுக்கு பல புதிய சலுகைகள், வசதிகளை வழங்கி வருகிறது. பண்டிகை காலங்களில் தனியார் செல் நிறுவனங்களுக்கு போட்டியாக அதிரடி சலுகைகளை அறிவித்து உள்ளது.
 
பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பில் தொகையை வசூலிக்க வாடிக்கையாளர் மையம் செயல்படுகிறது. அங்கு ரொக்கமாகவும் காசோலையாகவும் பெறப்படுகிறது. தற்போது பில் தொகையை ரொக்கமாக பெறும் நவீன எந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏ.டி.எம். எந்திரம்போல இந்த எந்திரத்தில் செல்போன் அல்லது டெலிபோன் எண்ணை அழித்தினால் கட்டணம் எவ்வளவு என்பதை காட்டும். அந்த தொகையை எந்திரத்தில் போட்டு விட வேண்டும். அதை ஏற்றுக் கொண்டு ரசீதை வழங்கும்.
 
உதாரணத்திற்கு பில் தொகை ரூ.779 என்றால் ரூ.780 ஆகவோ அல்லது ரூ.800 ஆகவோ செலுத்தினால் மீதி தொகையை திருப்பி தராது. ஆனால் கூடுதலாக செலுத்தப்பட்ட பணத்தை வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைத்துக்கொண்டு அடுத்த பில் தொகையில் அதை கழித்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
 
மேலும் விடுமுறை நாட்களிலும் இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். 24 மணி நேரமும் இந்த இயந்திரம் செயல்படக் கூடியது. வாடிக்கையாளர்கள் எப்போதும் விரும்பினாலும் பில் தொகையை ரொக்கமாக கட்டலாம். வரிசையில் காத்து நின்று பணம் செலுத்த தேவை இல்லை.
 
சென்னை பி.எஸ்.என்.எல். முதல் கட்டமாக 3 இடங்களில் இந்த வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அண்ணாநகர், அடையார், கோடம்பாக்கம் ஆகிய வாடிக்கையாளர் சேவை மையத்தில் பில் தொகை வசூலிக்க நவீன எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஆர்.கே. நகர், பூக்கடை, ஜி.ஆர். காம்ப்ளக்ஸ், கிரிம்ஸ் ரோடு, கெல்லீஸ், கிண்டி ஆகிய 6 இடங்களில் விரைவில் இந்த வசதி விரிவுப்படுத்தப்படுகிறது. இந்த புதிய வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று பி.எஸ்.என்.எல். அதிகாரி கேட்டுக்கொண்டார்.

0 comments: