Saturday 27 November 2010

சிறுமி கற்பழிப்பு 4 பேர் கைது மிக கொடுரம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஒருநாள் முழுவதும் சிறுமியை ஜெயில் ஊழியர்கள் கற்பழித்த கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந் துள்ளது. ஆக்ரா அருகே உள்ள தாஜ்சிட்டியில் நேபாளத்தைச் சேர்ந்த தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இவர்கள் கூலி வேலை செய்து பிழைத்து வந்தனர்.இவர்களது மகள் கண்ணு  (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மைனர் பெண்ணான இவள் சம்பவத்தன்று மளிகைக்கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தாள்.

அப்போது ஆக்ரா ஜெயிலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சியாம்வீர், ராகுல், அனில், நசிர் ஆகிய 4 பேர் பணி முடிந்து திரும்பிக் கொண்டு இருந்தனர்.

அவர்கள் சிறுமி கன்னுவைப்  பார்த்ததும் அவளை அடையும் வெறியில் ஒதுக்குப்புறமான இடத்துக்கு கடத்திச்சென்று கற்பழித்தனர். ஒருநாள் முழுவதும் 4 பேரும் மாறி மாறி கற்பழித்தனர். இதில் சிறமி மயக்கம் அடைந்தாள். இதை யடுத்து கன்னுவை  தண்டவாளத்தின் அருகே வீசி விட்டு தப்பிச் சென்றனர்.

இதற்கிடையே மகளை காணாமல் தவித்த நேபாள தம்பதி கண்ணு வை பல இடங்களில் தேடினார்கள். கடைசி யில் பிச்புரி என்ற இடத்தில் ரெயில் தண்டவாளத்தின் அருகே கண்ணு  மயங்கிய நிலையில் இருப்பதை கண்டனர். பதறித்துடித்து அவளை மீட்டனர்.

அப்போது கண்ணு வை 4 பேர் கொண்ட கும்பல் மாறி மாறி கற்பழித்தது தெரிய வந்தது. உடனே நேபாள தம்பதி மகளை அழைத்துக்கொண்டு போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தனர்.

கண்ணுவுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்ததால் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்திய பின்பு இந்த சம்பவத்தில் ஜெயில் ஊழியர்கள் 4 பேர் ஈடுபட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

4 பேர் பெயர் விவரங்களும் தெரிய வந்தது. அதை வைத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர். இதில் சியாம் வீர் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்ற 3 பேரும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

0 comments: