Sunday 29 August 2010

ஜெயாவுக்கு வருவது வேடிக்கை பார்க்கும் கூட்டமே : குஷ்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
  ஜெயலலிதாவுக்கு வருவது வேடிக்கை பார்க்கும் கூட்டம் என்று தமிழக பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஜெயலலிதாவுக்கு கோவை, திருச்சி கூட்டங்களில் மக்கள் அலைமோதியதாகச் சொல்கின்றனர். அது மக்கள் கூட்டம் அல்ல.
கடந்த தேர்தலில் தோற்றதும் அவர் வெளியே வரவில்லை. ஓய்வு என்று அறைக்குள்ளேயே இருந்தார். நாலரை வருடங்களாக அவரைப் பார்க்க முடியவில்லை.
எனவே வேடிக்கை பார்க்க அவரது கட்சிகாரர்களே திரள்கிறார்கள். அவரது தோல்வி இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.
எங்கள் தலைவரை ஜெயலலிதா வம்புக்கு இழுப்பதும் அவரது குடும்பத்தினரை விமர்சிப்பதும் பண்பாடல்ல. எங்களாலும் கீழே இறங்கி பேச முடியும்.
ஆனால் நாகரீகமாக பேசுங்கள் என்று சமீபத்தில் நடந்த பேச்சாளர் கூட்டத்தில் கலைஞர் கூறியுள்ளார். ஜெயலலிதா எங்கு வேண்டுமானாலும் கூட்டங்கள் நடத்திப் பேசட்டும். நாங்கள் அவரது கூட்டங்களை வேடிக்கையாகத்தான் பார்க்கிறோம். அவற்றைப் போட்டியாக எடுத்துக் கொள்வதில்லை. எங்களுக்கு அந்த கூட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை" என்றார். ___ 

0 comments: