இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை : தமிழகத்தில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் பரவிவருகிறது. 50 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது . பன்றிக்காய்ச்சல் நோய் அண்மையில் கேரளாவில் வேகமாகப் பரவி, பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கேரள எல்லை மாவட்டங்கள் வழியாக தமிழகத்திலும் இந்நோய் பரவியது. இதுவரை தமிழகத்தில் 2 பேர் இந்நோய்க்கு பலியாகி உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னை, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட நகரங்களில் பன்றிக்காய்ச்சல் அறிகுறி சிலருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதுவரை 50 பேருக்கு இந்நோய் அறிகுறி இருப்பதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
1 comments:
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)
Post a Comment