தெலுங்கு நடிகையும், தற்போது சத்யராஜ் - கரண் இணைந்து நடித்து வரும் 'இரண்டு முகம்' படத்தின் நாயகியுமான சுஹாணிக்கு போதை கடத்தல் மும்பலுடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகி நிலைக்கு உயர்ந்தவர் சுஹானி. ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் இவர் கரணுக்கு ஜோடியாக 'இரண்டு முகம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அர்விந்த்ராஜ் இயக்குகிறார். சுஹானிக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவர் சமீபத்தில் போதை பொருள் வைத்திருந்ததாக கைதானார். அவரிடம் போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தியபோது சுஹாணிக்கும், தனக்கும் தொடர்பு இருப்பதாக கூறினார். இதையடுத்து போலீஸ் பார்வை சுஹாணி மேல் திரும்பியுள்ளது. அவரை கைது செய்ய காவல்துறை ஆதரங்களை திரட்டி வருகிறார்களாம். மது அருந்துவது, புகை பிடிக்கும் பழக்கம் உடைய சுஹாணி, இரவு விடுதிகளில் கோகைன் என்ற போதை பொருளை பயன்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இதை மறுத்துள்ள சுஹாணியின் பெற்றோர்கள் எனது மகள் அப்பாவி, போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.
Tuesday 15 June 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment