Monday 3 May 2010

இரவு விடுதி ஒன்றில் வித்தியாசமான காமக் களியாட்டம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மலேசியா பொருளாதாரத்தில் முன்னேறி வருகின்ற நாடு என அரசியல் தலைவர்களில் இருந்து பொருளாதார வல்லுனர்கள் வரை குறிப்பிடுகிறார்கள். ஆனால், அதற்கும் மேலாக பாலியல் விஷயத்திலும் வெகு வேகமாக முன்னேறி வருகிறது என எண்ணத் தோன்றும் அளவுக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின்றன. கோலாலம்பூர் ஜாலான் முன்ஷி அப்துல்லாவில் பல இரவு விடுதிகள் உள்ளன. சூரியன் மறைந்ததும் நம் நாட்டைச் சேர்ந்த இளசுகளும் வெளிநாட்டு ஜோடிகளும் சாரை சாரையாக இந்தப் பகுதிக்கு படை எடுக்கின்றன. அவர்கள் ஆட்டம் பாட்டம் என பல கேளிக்கை காரியங்களில் ஈடுபடுகின்றனர். மே 1-ஆம் தேதி தொழிலாளர் தின நாள் அன்று ஓர் இரவு விடுதியில் சுமார் 100 பேர் கூடி இருக்கிறார்கள். அவர்கள் ஒரு வித்தியாசமான காமக் களியாட்ட நிகழ்வு ஒன்றை அரங்கேற்றி இருக்கிறார்கள். பெண்களே.. பெண்களை சீண்டி விளையாடுவதும் பாலியல் சேட்டைகள் செய்வதும் நடந்திருக்கிறதாம். அதோடு இளம் அழகிகள் கண்களைக் கட்டிக் கொள்வார்களாம். மற்றவர்கள் எங்கே முத்தமிட வேண்டும் என விரும்புகிறார்களோ அந்த இடத்தில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வார்களாம். ஏனென்றால் முத்தமிடுவது யாரென்று தெரியாமல் இருந்தால்தான் அதில் ஒரு திரில் இருக்குமாம். சில இளம் பெண்கள் இன்னும் ஒரு படை மேலே போய் விட்டார்களாம். மற்றவர்கள் முத்தமிடும்போது உடுத்தியிருக்கும் துணி உறுத்தக்கூடாது என்பதால் மேல் சட்டைகளைக் கழற்றி விட்டார்களாம். கண்ணுக்கு விருந்தாக நடந்த இந்த களியாட்டங்களை வந்திருந்த ஆண்களும் பெண்களும் பார்த்து ரசித்தார்களாம். இது தவிர காம உணர்ச்சியைத் தூண்டி கிளுகிளுப்பு ஏற்றும் வகையில் நடனமணிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்களாம். இந்த இரவு விடுதி இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணிவரை திறந்திருக்குமாம். இதில் நுழைவதற்கு அடையாளக் கார்டு எதுவும் காட்ட வேண்டியதில்லையாம். முதியவர் முதல் சின்னப் பசங்கள் வரை எல்லாருக்கும் கதவு திறந்தே இருக்குமாம். ஓர் ஆண்மகன் தனியாக வந்தால் நுழைவுக் கட்டணம் 20 ரிங்கிட்டாம். அதோ ஆண் ஜோடியோடு வந்தால் 35 ரிங்கிட்தானாம். 5 ரிங்கிட் கழிவு உண்டாம். இதை அந்தப் பகுதியில் உள்ள இன்னொரு விடுதியில் வேலை பார்க்கும் ஒரு பெண் கூறியதாக கோஸ்மோ பத்திரிகை செய்தி வெளியிட்டு இருக்கிறது.

0 comments: