இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அரசு போக்குவரத்துக் கழக டிரைவர்கள் பஸ் ஓட்டும்போது செல்போன் எடுத்து செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறும் டிரைவர்கள் மீது, போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, பஸ் டிரைவர்கள், இப்படிச் செய்து, விபத்து ஏற்படும்போது உயிர் இழப்பு அதிகம் ஏற்படுகிறது. வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசினால் தண்டனை விதிக்க சட்டம் உள்ளது. எனினும் நீண்ட தூர பயணத்தின்போது, டிரைவர்கள் செல்போன் பேசியபடி பஸ் ஓட்டுவதை கண்காணிக்க முடிவதில்லை. எனவே, பயணிகளின் நலன் கருதியும் செல்போன் பேசியபடி பஸ் ஓட்டுவதால் விபத்து ஏற்படுவதை தடுக்கவும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 
பஸ் ஓட்ட செல்லும் போது அரசு பஸ் டிரைவர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளது.
Monday, 4 January 2010
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment