Sunday, 13 September 2009

"தினமணி' செய்தி எதிரொலி விமான நிலைய வளாகத்துக்குள் பஸ்கள் இயக்கம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பயணிகளின் வசதிக்காக விமான நிலைய வளாகத்துக்குள் மாநகர பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் வந்து செல்கின்றன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நாள்தோறும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்வதற்கு முறையான பஸ் வசதி இல்லை என்று "தினமணியில்' அண்மையில் செய்தி வெளியிடப்பட்டது. இந்தச் செய்தியின் எதிரொலியாக வெள்ளிக்கிழமை முதல் தாம்பரத்தில் இருந்து செல்லும் மாநகர பேருந்துகள் அனைத்தும் விமான நிலைய வளாகத்தின் உள்ளே வந்து செல்வதற்கு தமிழகப் போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, விமான நிலைய வளாகத்தின் உள்ளே பேருந்துகள் வந்து செல்கின்றன.

1 comments:

said...

It'll be useful for all the people. Ordinary and Volvo Buses should be operated to Major areas from the Chennai Airport.