Saturday, 19 September 2009

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
துபாயில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை எமிரேட்ஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை செய்தனர். திருச்சி மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கம்ப்யூட்டர் உதிரி பாகம் உள்பட எலக்ட்ரானிக் பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

0 comments: