Tuesday 15 November 2011

செக்ஸ் வீடியோ பிரதிகள்” பள்ளிவாசல்களில் விநியோகம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பினாங்கு செபெராங் பிராயில் உள்ள பல பள்ளிவாசல்களுக்கு செல்லும் முக்கியமான இடங்களில் கடந்த வாரம் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் செக்ஸ் வீடியோவின் பிரதிகள் வைக்கப்பட்டிருந்ததைத் கண்டு வெள்ளிக்கிழமைத் தொழுகையில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்தனர். தலைநிலத்தில் எட்டுப் பள்ளிவாசல்களில் அந்த செக்ஸ் வீடியோவின் 50 பிரதிகள் கண்டு பிடிக்கப்பட்டதாக குவார் பெராஹு பள்ளிவாசல் தலைவர் அபு பாக்கார் டாகிலினி அபு ஹசான் கூறினார்.
பச்சை நிற மேலுறைகளைக் கொண்டிருந்த அந்த விசிடிக்கள் பள்ளிவாசல்களின் நுழைவாயில்களில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் யார் அதனை வைத்தனர் என்பது யாருக்கும் தெரியவில்லை என அபு பாக்கார் கூறினார்.
அந்த விசிடி-யின் மேல் உறையில் Wasiat Tok Guru and Saksikan (கிளந்தான் மந்திரி புசாரும் பாஸ் ஆன்மீகத் தலைவருமான நிக் அஜிஸ் நிக் மாட்-டை குறிக்கிறது) என எழுதப்பட்டிருந்ததால் பலர் அந்த விசிடி-க்களை எடுத்துக் கொண்டனர்.
ஆனால் வீட்டுக்குச் சென்றதும், அந்த விசிடி-யை போட்டுப் பார்த்த போது அது அன்வார் சம்பந்தப்பட்டது எனக் கூறப்படும் செக்ஸ் வீடியோ என்பதைக் கண்டு பிடித்தனர் என அபு பாக்கார் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
செக்ஸ் வீடியோவுக்கு எதிராக முஸ்லிம்கள் பேரணி
இதனிடையே பள்ளிவாசல்களில் செக்ஸ் வீடியோ பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டதை ஆட்சேபித்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குவார் பெராஹு பள்ளிவாசலுக்கு அருகில் பேரணி ஒன்றை நடத்தினர்.
செக்ஸ் வீடியோ பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டது முஸ்லிம்கள் கொண்டுள்ள ஆத்திரத்தை அந்தப் பேரணி உணர்த்தியதாக அபு பாக்கார் சொன்னார்.
ஆட்சேபக் கூட்டத்துக்குப் பின்னர் அபு பாக்காரும் சுங்கை லெம்பு, குபாங் செமாங் பள்ளிவாசல்களைச் சேர்ந்த தலைவர்களும் குபாங் செமாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்கள்.
“போலீஸ் அந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து பள்ளிவாசல்களுடைய நற்பெயரை நாசப்படுத்தியவர்களைக் கண்டு பிடிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என அவர் மேலும் கூறினார்.

1 comments:

said...

தெரிந்து கொள்ளுங்கள்.

இதோ வியப்பான உண்மை தகவல்கள்.

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

1. ****
அதிசயத்தக்க‌ வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு
****


2.**** ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர்……. விடியோ விளக்கம் *****

3.**** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள்.
மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……எல்லா சூழ்நிலைக‌ளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.
****