இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நவம்பர் 10:அமெரிக்க கடற்படையின் அணுசக்தி மூலம் இயங்கும் யு.எஸ்.எஸ் ஹாரி ட்ரூமென் கப்பலின் இந்திய கேப்டன் துஷார் தெம்பே ( வயது 49) கப்பலிலேயே திடீரென இறந்தார். மும்பையைச் சேர்ந்த துஷார் சிறுவயதிலேயே பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறி விட்டார். டெக்ஸாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயின்ற துஷார் அமெரிக்க கடற்படையின் விமானப் பிரிவில் பணிக்குச் சேர்ந்த இவர், பின்னர் கடந்த மூன்று மாதங்களுக்குப் முன் யு.எஸ்.எஸ் ஹாரி ட்ரூமென் கப்பலில் கமாண்டிங் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
முன்னதாக நேற்று கப்பலில் இருந்த துஷார் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் கப்பலிலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் விர்ஜினியாவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். ஆயினும், மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர். துஷாருக்கு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment