Tuesday 16 August 2011

பாரதிராஜாவின் படத்திற்கு இசையமைக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை: இயக்குனர் பாரதிராஜா தமது புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமாரை ஒப்பந்தம் செய்துள்ளார்.



பாரதிராஜா இறுதியாக இயக்கிய படம் பொம்மலாட்டம். தற்போது அவர் புதிதாக இயக்கவிருக்கும் படத்திற்கு அன்னக் கொடியும் கொடிவீரனும் என்று பெயரிட்டுள்ளார். இப்படத்திற்கு முதலில் இளையராஜாதான் இசையமைப்பாளர் என்று பெரிதும் நம்பப்பட்டது. பின்னர் ஏ.ஆர் ரஹ்மான் தான் இசையமைப்பாளர் என்று கூறப்பட்டது. இதனிடையே இந்த இருவரையும் விட்டுவிடு தற்போது ஜி.வி பிரகாஷ் குமாருடன் இணைந்துள்ளார் பாரதிராஜா. இப்படத்திற்கான பாடல் அமைப்பை இப்போதிலிருந்தே ஜி.வி பிரகாஷ் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.


“தமிழ் சினிமாவின் தலையாய இயக்குனரான பாரதிராஜா ஒரு சாதனையாளர். அவர் என்னை இசையமைப்பாளராகத் தேர்வு செய்திருப்பது எனக்குக் கிடைத்த ஒரு பெரிய அங்கீகாரம். ஒரு இசையமைப்பாளரிடமிருந்து சிறந்த பாடல்களை வாங்குவது அவரது பாணி. அந்த அனுபவத்திற்காகக் காத்துக்கொண்டிருப்பதாக” இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

0 comments: