Friday 5 August 2011

சென்னை மாநகராட்சி கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடக்கும். இந்த கூட்டத்திற்கு
 சென்னை மேயர் மா. சுப்ரமணியன் தலைமை தாங்குவார். ஆணையர் கார்த்திகேயன், துணை மேயர் சத்தியபாமா ஆகியோர் முன்னிலை வகிப்பர் என்று கூறப்பட்டது. இம்முறை கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கான விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.




இது தவிர, சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதை விரைந்து முடித்து, வார்டுகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments: