Thursday 26 May 2011

தாவூத் இப்ராகிம் இருக்கும் இடம் எனக்குத் தெரியும்: சோட்டா ராஜன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மும்பை தொடர் தாக்குதலை நடத்திய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்று கராச்சி நகரில் வசித்து வருகிறான். சமீபத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்த அமெரிக்கா படைகள் பின்லேடனை சுட்டுக்கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து தாவூத் இப்ராகிம் வேறு நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியானது.
தாவூத் இப்ராகிம் தலைமையிலான ரவுடி கும்பலுக்கு எதிரியாக செயல்பட்டு வருபவர் சோட்டா ராஜன். மும்பையைச் சேர்ந்த இவன் தலைமையிலும் மிகப்பெரிய கும்பல் உள்ளது.
மும்பை பொலிஸ் தேடியதைத் தொடர்ந்து கிழக்கு ஆசிய நாட்டுக்கு தப்பிச்சென்று சோட்டா ராஜன் வசித்து வருகிறான். தாவூத் கும்பலுடன் அடிக்கடி மோதும் சோட்டா ராஜன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை வெளியிட்டுள்ளான்.
அப்பேட்டியில் சோட்டா ராஜன் கூறியதாவது: தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் இல்லை. அவன் எங்கு இருக்கிறான் என்பது எனக்கு தெரியும். ஆனால் அதை இப்போது வெளியில் சொல்ல மாட்டேன். இந்திய உளவுத்துறையால் அவன் பதுங்கி உள்ள ரகசிய இடத்தை கண்டுபிடிக்கவே முடியாது.
ஏனெனில் அவனுக்கு உடனுக்குடன் தகவல் சொல்ல நிறைய பேர் உள்ளனர். இந்திய அரசியல்வாதிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள் பலர் இன்னமும் தாவூத் இப்ராகிமுடன் ரகசிய தொடர்பில் உள்ளனர். விரைவில் இவையெல்லாம் அம்பலமாகும்.
தாவூத் இப்ராகிம் வெளிநாடுகளில் பயணம் செய்தபடி உள்ளான். அவனுக்கு தேவையான எல்லா உதவிகளையும் பாதுகாப்பையும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ செய்து கொடுக்கிறது.
இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பல செயல்களை தாவூத் செய்து வருகிறான். இந்தியாவுக்குள் கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து அனுப்புவது அவன் தான். இந்தியாவில் உள்ள சிமி இயக்கத்துக்கு பணம் கொடுத்து எல்லா உதவிகளையும் தாவூத் செய்து வருகிறான்.

0 comments: