இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த செக்ஸ் லீலையை நித்யானந்தா சாமியாரின் சீடர் லெனின் என்பவர் ரகசியமாக படம் பிடித்து அம்பலமாக்கினார்.
நித்யானந்தாசாமியார் மீது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. இதையடுத்து தமிழ் நாட்டிலும், கர்நாடகாவிலும் நித்யானந்தா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கர்நாடக போலீசார் நித்யானந்தா சாமியை தேடி வந்தனர். ஹரித்துவார் கும்பமேளாவில் கலந்து கொண்ட சாமியார் நான் எந்த தவறும் செய்யவில்லை. நேரில் வந்து விளக்கம் அளிக்கிறேன் என்று சொல்லி மாயமாகி விட்டார்.
மடத்தின் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்த அவர் எங்கு போனார் என்பது மர்மமாக இருந்தது. கடந்த 45 நாட்களாக அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் இமாச்சலபிரதேசத்தில் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக கர்நாடக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர்.
இமாச்சலபிரதேச போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது சோலன் மாவட்டம் ஆர்கி என்ற இடத்தில் நித்யானந்தா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.
நித்யானந்தாவிடம் போலீசார் அங்கு வைத்தே முதல் கட்ட விசாரணை நடத்தினார்கள். அவரை பெங்களூர் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். நித்யானந்தா கொடுக்கும் வாக்கு மூலத்தின் அடிப்படையில் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
நித்யானந்தா கைது செய்யப்பட்டதால் அவரது தியான பீட சீடர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment