Friday 18 June 2010

கணவனின் ஆண்குறியை வெட்டிய மனைவி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள போலத் என்ற ஊரில் வீரமங்கை ஒருத்தி ஒழுக்கமில்லாத கணவரின் ஆண் குறியை அறுத்து எறிந்திருக்கிறார். ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் தொழிலாளியான அந்த நபர், பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு உல்லாசமாக திரிந்திருக்கிறார். மனைவி மக்களை மதிப்பது கிடையாது. இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் கணவனின் நடத்தை சரியில்லை என்று உள்ளூர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்திருக்கிறாள். அதனால், எந்தப் பயனும் கிடைக்கவில்லை. கணவனின் நடத்தையிலும் மாற்றம் இல்லை. இதிலும் ஏமாற்றமடைந்த அந்தப் பெண்மணி, கணவனுக்கு பாடம் புகட்ட எண்ணினாள். சம்பவம் நடந்த அன்று வீட்டில் இருந்த கணவனுக்கு மதுவை ஊற்றி கொடுத்திருக்கிறாள். போதை தலைக்கேறட்டும் என போதை மருந்தும் சேர்த்திருக்கிறாள். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த கணவனின் ஆண்குறியை கத்தியால் சரக்கென்று அறுத்து எறிந்து விட்டார். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், இது ஒரு கொலை முயற்சி என்ற வகையில் அந்த பெண்ணைக் கைது செய்திருக்கிறார்கள் என்று போலத் காவல்துறை தலைவர் மொகிண்தர் சிங் தெரிவித்தார். ஆண்குறியை இழந்த அந்த கணவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இப்போது இவர்களின் குடும்ப வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. உங்கள் ஒட்டு விரமங்கைக்கா அல்லது ஆணுக்கா

3 comments:

said...

வெட்டு ஒண்ணு துண்டும் ஒண்ணு தான் !

:)

said...

kodumaiyana sambavam...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_17.html

said...

NISA SAID.... I LIKE IT.